மத்திய வங்கி ஆளுநர் பதவி விலக தீர்மானம்!
Friday, September 10th, 2021மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் தான் இவ்வாறு பதவி விலகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்த இந்திரஜித் குமார சுவாமி தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியதையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 2019 டிசம்பர் 24ஆம் திகதி, பேராசிரியர் டப்ளியூ. டி. லக்ஷமன் இலங்கை மத்திய வங்கியின் 15 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!
அடுத்த வாரம்முதல் அரிசி விலை குறைப்பதற்கு நடவடிக்கை - விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்...
இலங்கை மக்களுக்கு தமிழக பொலிஸார் 1.40 கோடி நிதியுதவி – முதலமைச்சர் ஸ்ராலினிடம் காசோலையாக வழங்கிவைப்ப...
|
|