மத்திய கிழக்கிலிருந்து 71 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
Sunday, November 8th, 2020மத்திய கிழக்கில் மூன்று நாடுகளிலிருந்து 71 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அதன்படி ஓமான், மஸ்கட்டிலிருந்து 19 இலங்கையர்கள் ஓமான் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான WY-373 என்ற விமானத்தில் நேற்றிரவு 7.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
நேற்றிரவு 11.30 மணியளவில் 35 இலங்கையர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து ஈ.கே -648 என்ற எமிரேட்ஸ் விமானம் மூலமாக நாட்டை வந்தடைந்தனர்.
தோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான கியூ. ஆர் – 668 என்ற விமானத்தில் 17 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Related posts:
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை மீள திறக்க அனுமதி - கல்வி அமைச்சு அறிவிப்பு!
2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்ப...
வடக்கில் ஒரு நாளில் 459 பேருக்கு கொரோனா தொற்றுறுதி - 8 கொரோனா மரணங்களும் பதிவு!
|
|