மத்தியவங்கி பிணை முறி மோசடி விவகாரம்: நாடாளுமன்றில் விவாதம்!
Monday, January 23rd, 2017
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் நாளை நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது. மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கோப் குழுவினால் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில் குறித்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நாளை நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது.அத்துடன், நாளை காலை 9.30 முதல் இரவு 7.30 மணி வரையில் விவாதம் நடத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு தொடர்பு உண்டு என கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
தொல்லியல் திணைக்களம்: சிரேஷ்ட அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரித நடவடிக்கை – ஜனாதிபதி!
80 வீதமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதிப்பத்திரம் இல்லை - ஊர்காவற்துறை பொலிஸார்!
சாவகச்சேரி எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வடிகாலமைப்புக்கள் சீரின்மையால் தொற்று நோய்கள் ஏற்படும் அச்சம...
|
|
|
மக்களின் நலன்கள் முன்னிறுத்தப்படாததால் மீண்டும் தோற்கடிக்கப்பட்டது நெடுந்தீவு பிரதேச சபையின் பாதீடு ...
அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீடுகள் வழங்கிவைப்பு!
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உறுதி செய்ய வேண்டும் – துறை...


