மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு குழு நியமனம் – பிரதமர் ஆலோசனை!

Thursday, October 1st, 2020

மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்காக ஒன்றிணைந்த குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், மதுவரித்திணைக்கள அதிகாரிகளின் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அலரி மாளிகை யில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் திணைக்கள அதி காரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம் பெற்றது

இதன்போது அரசியல் அழுத்தம் காரணமாக இடமாற்றப் பட்ட மதுவரித்திணைக்கள அதிகாரிகளின்  இடமற்றங் களை உடனடியாக நிறுத்தி, தகுதி அடிப்படையில் இட மாற்றம் செய்யுமாறு பிரதமர் மஹிந்த ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பலாலி விமான நிலைய அபிவிருத்தி குறித்து எவ்வித அனுமதியும் கிடைக்கவில்லை - இந்திய விமான நிலையங்களின் அ...
சீரற்ற வானிலை: தொற்று நோய்கள் பரவும் அபாயம் - தொற்றுநோய் தடுப்பு விசேட வைத்திய அதிகாரிகள்!
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என எதுவும் கிடையாது – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அற...