மதுபோதையில் சாரத்தியம்: 7802 சாரதிகள் கைது – பொலிஸ் தலைமையகம்!
Saturday, August 10th, 2019கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 136 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.
அதன்படி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் 136 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 7802 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Related posts:
தபால் ஊழியர் பற்றாக்குறை!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் புனரமைப்பு தொடர்பில் இந்தியாவுடன் புதிய உடன்படிக்கை - அமைச்சர்...
சாதாரண மக்களின் பட்டினியை போக்க நிவாரண பொதி வழங்க ஏற்பாடு - அமைச்சர் பந்துல நடவடிக்கை!
|
|