மக்கள் ஆணையை தேர்தல் ஆணைக்குழு வெற்றிபெறச் செய்யவேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
Thursday, June 4th, 2020மக்கள் ஆணையை வெற்றிபெற செய்வது தேர்தல் ஆணைக்குழுவின் கடமையாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டமை இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களின் ஆணையை செயற்படுத்தவதற்கு நாடாளுமன்றத் தேர்தலை கூடிய சீக்கிரம் நடத்துதவற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நடத்தப்படுவதனை முடிந்தளவு காலம் தாழ்த்துவதற்கு சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் சிலர் முயற்சித்தனர் ஆனாலும் அது நீதிமன்ற தீர்ப்பால் கலைக்கப்பட்டுவிட்து என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் குடிவரவு, குடியகல்வு சட்டங்கள் வலுப்படுத்தப்படும் - ஜனாதிபதி!
அரசாங்கம் விருப்பத்துடன் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை - கொரோனாவுடன் போராடும் அதேவேளை, அபிவிருத்திகள...
கொழும்பில் பதற்றம் - உடன் அமுலாகும் வகையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்!
|
|