மக்களுக்காக நேர்மையாக உழைப்பவர்களே மக்களின் தலைமையாக இருக்க முடியும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் தோழர் ரங்கன்!  

Wednesday, January 2nd, 2019

மக்களது அபிலாஷைகளும் தேவைப்பாடுகளும் நிறைவு செய்யப்பட வேண்டுமானால் நேர்மையானதும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கக் கூடிய தலைமைகளை உருவாக்க நீங்கள் முன்வரவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளரும் கட்சியின் வடமராட்சி, தென்மராட்சி பிரதேச இணைப்பாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை இம்பசிட்டி பகுதியில் நடைபெற்ற கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

யுத்தம் நடைபெற்ற காலத்திலும் சரி யுத்தம் நிறைவு பெற்ற காலத்திலும் சரி எமது மக்களுக்கு பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டவர்கள் நாங்கள்.

எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் அமைச்சராக இருந்தபோது இந்த இம்பசிட்டி கடல் வான் அகழ்வு பணிகளை மேற்கொண்டு இப்பகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்.

ஆனாலும் இந்த வான் பகுதி மீண்டும் பாதிக்கப்பட்டு கடற்றொழில் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாது மேலும் பல வாழ்வாதார தேவைப்பாடுகளுடன் இப்பகுதி மக்கள் வாழ்ந்துவருகின்றார்கள். இவற்றுக்கான தீர்வுகளை தேடவேண்டியது அவசியமானதாகும்.

அந்தவகையில் மக்களது பிரச்சினைகளை தீர்க்கக் கூடியவர்களை நீங்கள் உங்கள் தலைமைகளாக உருவாக்குவதன் உடாகவே இவ்வாறான பிரச்சினைகள் அனைத்தையும் விரைவாகத் தீர்த்துக்கொள்ள முடியும் என்றார்.

IMG_20190101_164312

IMG_20190101_173026

IMG_20190101_173230

IMG_20190101_164527

Related posts: