மகபேற்றுக் கால விடுமுறை நாட்களில் அரச, தனியார் பெண்களுக்கு சம உரிமை – தொழிற்சங்க விவகார அமைச்சர்!
Saturday, April 8th, 2017
அரச துறையில் நடைமுறையில் இருக்கும் மகப்பேறு கால விடுமுறையை தனியர் துறையிலும் அமுல்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தொழில் மற்றும் தொழிற்சங்க விவகார அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இதற்கான சட்டமூல வரைவு திருத்தங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச துறையில் பணி புரியும் பெண்களுக்கு மகப்பேறுக்காக 84 நாட்கள் சம்பளத்துடுன் விடுமுறை வழங்கப்படுகிறது. எனினும், தனியார் துறையில் இதற்கும் குறைவான விடுமுறை காலமே வழங்கப்படுகிறது. இரண்டு துறைகளிலும் தொழில் புரியும் பெண்களுக்கு சம உரிமையை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் என்றார்.
Related posts:
பல்கலை மோதல் வழக்கு ஒத்திவைப்பு!
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை - பாடசாலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!
நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் 20 இலட்சம் ஒதுக்கிடு: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
|
|