போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற யுவதி விமான நிலையத்தில் கைது!

Friday, December 25th, 2020

போலியான கனேடிய கடவுச் சீட்டை பயன்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் வழியாக கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டுக்காக யுவதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதியை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இன்று காலை கைதுசெய்துள்ளனர்.

22 வயதுடைய யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் குறித்த பெண் இன்றுகாலை துபாய் நோக்கி புறப்பட்ட எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே.-649 என்ற விமானத்தில் பயணிப்பதற்காகவே விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

டிக்கெட் கருமபீடத்தில் அவர் வந்தபோது அவரது கனேடிய கடவுச் சீட்டை சந்தேகித்த அதிகாரிகள் மேலதிக விசாரணைக்காக ஆவணங்களை விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்

இதன்போது கனேடிய கடவுச்சீட்டு உள்ளிட்ட பிற ஆவணங்கள் தொழில்நுட்ப பரிசோதனைக்கு அதிகாரிகள் உட்படுத்தியபோது யுவதி வழங்கிய கனேடிய கடவுச்சீட்டு வேறு ஒருவருக்கு சொந்தமானது என்பதும், கடவுச்சீட்டில் காணப்படும் யுவதியின் புகைப்படம் போலியானது என்பதும் தெரியவந்தது.

இந்நிலையிலேயே குறித்த யுவதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப் புலநாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: