போருக்குப் பின்னரான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதி – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, October 5th, 2021

போருக்குப் பின்னரான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதியளித்துள்ளளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில்  மேலும் கூறுகையில் -.

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள், அமைதி மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான அனைத்து பிரச்சினைகளிலும் உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளதாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமீபத்தில் தெரிவித்ததாக  அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த முயற்சியில், ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட சர்வதேச கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: