போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு – தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் மீற முடியாது – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, July 10th, 2021

போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு. என்றாலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீற முடியாது அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் மற்றும் ஆசிரியர் சங்கம் முன்னெடுத்த போராட்டங்களில் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கையை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.  குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்திலோ அல்லது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலோ இந்த நடவடிக்கையை தான் என்றும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் கொரோனா தொற்றினால் உலகமே எதிர்த்துப் போராடிவரும் நிலையில் பொதுமக்கள் பொறுப்பான முறையில் செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: