போதைப் பொருள் விவகாரம் – மாலைதீவு அரசுடன் இணையும் இலங்கை!

Friday, February 8th, 2019

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நிகழ்ச்சித் திட்டங்களில் விரிவான ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இலங்கை மற்றும் மாலைதீவு அரச தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள அரச தலைவர் இப்ராஹிம் மொஹமட் சாலிஹ் மற்றும் இலங்கை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அரச தலைவர் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.

நீண்டகால நட்பு நாடுகளான இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் இருந்துவரும் உறவுகளை மேலும் பலப்படுத்தவும் வர்த்தகம், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இரண்டு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தவும் அந்தத் துறைகளில் புதிய உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்வது பற்றியும் தலைவர்கள் கலந்துரையாடினர். இரண்டு நாடுகளுக்குமிடையில் இணைந்த வர்த்தக வாய்ப்புக்களை மேம்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் பல முதலீட்டாளர்கள் மாலைதீவில் தமது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையாக வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இலங்கையில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மாலைதீவு மாணவர்களுக்கு நுழைவிசைவு வழங்குதல் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

Related posts: