போக்குவரத்து அபராத கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலம் இன்றுடன் நிறைவு!

Friday, January 15th, 2021

போக்குவரத்து அபராத கட்டணங்களைச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலம் ஜனவரி 15ஆம் திகதியாகிய இன்றுடன் நிறைவடைந்துள்ளதாகத் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாகத் தபால் திணைக்களத்தின் அஞ்சல் மற்றும் உப தபால் நிலையங்களில் போக்குவரத்து அபராதத் தொகையினை பொது மக்களுக்குச் செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகை காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

அதன்படி, இன்றையதினம்முதல் குற்றம் புரிந்த தினத்திலிருந்து 14 நாட்கள் வரை மேலதிக அபராதத் தொகை இன்றியும் மற்றும் 28 நாட்கள் வரை மேலதிக அபராதத் தொகையுடனும் தபால் மற்றும் உப தபால் நிலையங் களில் செலுத்த முடியாது என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

நாடு முழுவதும் அனைத்து தபால் நிலையங்களும் திறக் கப்பட்டுள்ளது என்றும் பயணத் தடைகள் நீக்கப் பட்டிருப்பதால் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: