பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது வாள்வெட்டு – விசேட அதிரடிப் படையினர் தீவிர தேடுதல்!
Monday, July 31st, 2017கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளான குருநாகல் பகுதியை சேர்ந்த ஆர்.எம்.டி.கே தர்மிக்க ரத்நாயக்கா (வயது-34) மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த ஏ.கே சுரேந்திரன் (வயது-26) ஆகிய இருவர் மீதும் கொக்குவில் பொற்பதிப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(30) பட்டப்பகலில் பத்துப் பேர் கொண்ட குழுவினரால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் யாழின் பல்வேறு பகுதிகளிலும் விசேட அதிரடிப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக நான்கு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்தத் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்வலுவை சிக்கனமாக பாவிக்கவும் - மக்களிடம் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா கோரிக்கை!
பொதுத் தேர்தல்: செலவு 20 பில்லியனைத் தாண்டலாம் - தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம்!
சந்தையில் சீனி தொடர்பாக மதிப்பாய்வு செய்ய நடவடிக்கை - நுகர்வோர் அதிகார சபையி அறிவிப்பு!
|
|