பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது வாள்வெட்டு – விசேட அதிரடிப் படையினர் தீவிர தேடுதல்!
Monday, July 31st, 2017
கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளான குருநாகல் பகுதியை சேர்ந்த ஆர்.எம்.டி.கே தர்மிக்க ரத்நாயக்கா (வயது-34) மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த ஏ.கே சுரேந்திரன் (வயது-26) ஆகிய இருவர் மீதும் கொக்குவில் பொற்பதிப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(30) பட்டப்பகலில் பத்துப் பேர் கொண்ட குழுவினரால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் யாழின் பல்வேறு பகுதிகளிலும் விசேட அதிரடிப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக நான்கு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்தத் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
630 பாடசாலைகள் மீது சுகாதார வழக்கு !
அரச தலைவரின் சிம்மாசன உரையுடன் எதிர்வரும் 18 ஆம் திகதி கூடுகிறது இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்றம் ...
டெங்குவின் புதிய திரிபு குறித்து பொதுமக்களுக்கு வைத்தியர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை !
|
|
|


