பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி ஆரம்பம்!

Sunday, July 12th, 2020

யாழ்ப்பாணம் மாநகரில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் பணி இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய தலைமையில் இராணுவம், பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து  யாழ்ப்பாணம் மாநகரை தூய்மைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் பணி இன்று முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்பாக இடம்பெறும் பிரதான நிகழ்வுடன் நிறைவுபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் காணப்படும் பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுப்பொருள்களை அகற்றி நகரைச் சுத்தப்படுத்தும் நோக்குடன் இந்தப் பணி சுழற்சிமுறையில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: