பொலித்தீன் தடைக்கு 95 வீதம் வெற்றி!
Saturday, October 14th, 2017
பொலித்தீன் தடைக்கு 95 வீதமான பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபை நடத்திய ஆய்வொன்றின் மூலம் இந்த விபரம் கிடைத்துள்ளதாக லால் மேர்வின் தர்மசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நாட்டில் பொலித்தீன் தடை செய்யப்பட்டதில் இருந்து முதல் 6 வாரங்களாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த ஆய்வை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கின் பெண்கள் விவகாரப் பிரிவு பெயர்ப் பலகையில் மாத்திரம் தான் இயங்குகின்றது: - வடமாகாண சுகாதார...
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மோப்ப நாய்கள் - ரயில்வே திணைக்களம்!
இந்தியாவின் உதவியுடன் திருமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் பிரதமர் மோடியுடன் ஜனாத...
|
|
|


