பொலித்தீன் தடைக்கு 95 வீதம் வெற்றி!
Saturday, October 14th, 2017பொலித்தீன் தடைக்கு 95 வீதமான பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபை நடத்திய ஆய்வொன்றின் மூலம் இந்த விபரம் கிடைத்துள்ளதாக லால் மேர்வின் தர்மசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நாட்டில் பொலித்தீன் தடை செய்யப்பட்டதில் இருந்து முதல் 6 வாரங்களாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த ஆய்வை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உறுப்பினர்கள் வரவின்மையால் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு!
ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
அமைச்சரின் அகவை நாளை முன்னிட்டு கட்சியின் ஆதரவாளர்களால் பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுப்பு!
|
|