பொருளாதார நெருக்கடியிலும் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பு – வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
Monday, February 20th, 2023தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், சந்தையில் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே, குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்த வாகனங்களின் விலை தற்போது ஸ்த்திர நிலையை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலானவர்கள் கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறியமையினால் வாகனங்களின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்தது.
எனினும், தற்போது கேள்வி அதிகரித்துள்ளதால், வாகனங்களின் விலை ஸ்த்திரநிலையை அடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தண்டப் பணத்திற்கு எதிராக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தப் போரட்டம்!
சாரதி அனுமதி பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ் பெறுவதில் மக்கள் சிரமம்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த இடையேயான சந்திப்பு நிறைவு!
|
|