பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் – நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை!
Thursday, June 10th, 2021உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என வாழ்க்கைச் செலவு குழு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் வாழ்க்கைச் செலவு குழு நேற்று கூடியதாக வர்த்தக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை அதிகரிக்குமாறு நேற்று நுகர்வோர் விவகார அதிகார சபை கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், இவ்வாறான சூழ்நிலையில் பொருட்களின் விலைகளை அதிகரிக்காது மாற்று வழிகளை கையாளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவித்ததாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாடசாலை இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பம்!
பட்டதாரிகளை அவர்களின் பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட துறைகளில் தொழிலுக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எ...
சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றுங்கள் - தவறின் நாட்டை மீண்டும் முடக்க நேரிடும் என சுகாதாரத்த...
|
|