பொது போக்குவரத்து சேவைக்கு எந்த நிவாரணங்களும் இல்லை – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!

Friday, November 17th, 2017

புதிய பாதீடில் பொது போக்குவரத்து சேவைக்கு எந்த நிவாரணங்களும் வழங்கப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, கொழும்பில் ஊடக சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் அரச பேருந்துகள் தனியார் பேருந்துகள் மற்றும் தொடருந்து சேவைகள் உள்ளிட்ட எந்த பொது போக்குவரத்துக்கும் சலுகைகள் அறிவிக்கப்படவில்லை.

இதனைத் தவிர்த்து சிறிய ரக வாகனங்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக சிறிய ரக வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து கடும் வாகன நெரிசல் ஏற்படும். இதனாலும் பொது போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related posts: