பொதுப் போக்குவரத்து சேவைப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி!
Thursday, May 16th, 2019பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாளாந்தம் ரயில்வே திணைக்களத்துக்கு 16 மில்லியன் வருமானம் கிடைத்துவந்த நிலையில், தற்போதைய வருமானம் 8 மில்லியனாக குறைவடைந்துள்ளதாகவும் இது 50 வீத வருமான வீழ்ச்சி எனவும், ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபையின் வருமானத்தில் 25 முதல் 30 மில்லியன் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, சபையின் பொது முகாமையாளர் ரொஷான் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்துகளின் நாளாந்த வருமானம் 75 முதல் 80 மில்லியனினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா வைரஸ் : உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை!
அமைச்சர் பந்துல குணவர்தன துபாய் பயணம் - இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்துறை பேச்...
அரச அதிகாரிகள் தொடர்பான முறைப்பாடுகளை முறைப்பாடு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் - இராஜாங...
|
|