பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு – ருவண்டா ஜனாதிபதியுடனும் சந்திப்பு!

Saturday, May 6th, 2023

இங்கிலாந்தில், பொதுநலவாய செயலகத்தில் இடம்பெறும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்றுள்ளார்.

இன்’று இடம்பெறவுள்ள மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்தநிலையில், நேற்று இடம்பெறும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், ருவண்டா ஜனாதிபதி போல் ககாமையும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனில் சந்தித்துள்ளார்.

இதன்போது, இதுதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: