பொதியிட்டு கொண்டு வரப்படும் பொதிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது – தபால் மா அதிபர்!

Wednesday, April 24th, 2019

நாடு முழுவதும் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு உள்ளுர் மற்றும் வெளிநாடுகளுக்கு தபால் மூலம் விநியோகிப்பதற்காக கையளிக்கப்படும் பொதிகள் தபால் அலுவலகத்தின் கருமப்பீட அதிகாரிக்கு அல்லது அதிகாரம் கொண்ட அதிகாரி ஒருவர் முன்னிலையில் பொதியிட்டு ஒப்படைக்கப்படும் பொதிகளை மாத்திரம் தபால் அலுவலகங்கள் பொறுப்பேற்குமாறு அனைத்து தபால் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரிய ரட்ண இந்த ஆலோசனையை தபால் நிலைய அதிபர்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனைக்கு அமைவாக வெளி இடங்களில் இருந்து பொதி செய்யப்பட்டு தபாலில் சேர்ப்பதற்காக பொதிகளை சமர்ப்பிக்க வேண்டாம் என இதன் மூலம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கமைவாக வெளி இடங்களில் இருந்து பொதி செய்யப்பட்டு எடுத்து வரும் பொதிகளை ஏற்றுக்கொள்வதை கருமப்பீட அதிகாரிகள் நிராகரித்தல் அல்லது பொதிகளை திறந்து காட்டி மீண்டும் பொதியிடுமாறு பொது மக்களுக்கு தபால் அலுவலகங்களில் ஆலோசனை வழங்கப்படக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஏற்படக் கூடிய சிரமங்களை தவிரத்துக் கொள்வதற்காக அனைத்துப் பொதிகளையும் தபால் அலுவலகங்களில் பொதியிட்டு கையளிக்குமாறு பொது மக்களிடம் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இதே போன்று பொதிகளை கையளிப்போர் தமது அடையாளத்தை உறுதி செய்வதன் தேவையையும் தபால்மா அதிபர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts: