பெற்றோல் குண்டு வீச்சு: பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
Thursday, June 22nd, 2017யாழ். பருத்தித்துறை முதலாம் கட்டைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை(17) பெற்றோல் குண்டு வீசப்பட்டமை தொடர்பில் இளைஞரொருவர் நேற்றைய தினம் யாழ். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலோலி தென்மேற்கைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் புதன்கிழமை(21) யாழ். பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
இலங்கைக்கு அமெரிக்கா 21 மில்லியன் டொலர் உதவி!
பழைய முறைமையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தெரிவுக்குழு இணக்கம் - தேர்தல் மறுசீரமைப்பு தொ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது -...
|
|