பெற்றோல் ஒரு லீற்றர் 20 ரூபாவால் அதிகரிப்பு – அனைத்து எரிபொருள்களும் புதிய விலையில் இன்றுமுதல் விற்பனை!

Saturday, June 12th, 2021

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று நள்ளிரவுமுதல் புதிய விலை அமுலாகியுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய விலையின்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 157 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அதேநேரம் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 23 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 184 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 111 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 144 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிகின்றது.

இதேவேளை லங்கா ஐஓசி எரிபொருட்களின் விலையும் குறித்த அறிவிப்பின் பிரகாரம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: