பெப்ரவரிமுதல் பத்து அத்தியாவசிய பொருட்களுக்கு விலை நிர்ணயம் – தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு நடைமுறையிலிருக்கும் என வர்த்தக அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, January 3rd, 2021

எதிர்வரும் பெப்ரவரி மாதம்முதல் பத்து அத்தியாவசிய பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே ஆறு மாதங்களுக்கு விற்கப்படவேண்டுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் அரிசி, கோதுமை மா, ரின்மீன், பருப்பு, முட்டை, நெத்தலி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவையே எதிர்வரும் ஜீன் மாதம் முதல் நிரிணயிக்கப்பட்டவிலையில் விற்கப்படவேண்டுமென தெரிவித்துள்ளார்.

இந்த உணவுப் பொருட்கள் தொடர்பில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடம் விநியோகம் செய்வதற்கான விலை மனு கோரப்பட உள்ளதாகவும், இது தொடர்பில் பத்திரிகையில் இந்த மாதம் விளம்பரம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விலை மனுக்கள் கோரப்பட்டு குறைந்த விலையில் பொருட்கள் கொள்வனவு செய்யும் நடைமுறையொன்றை வர்த்தக அமைச்சு மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடம் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளும் பொருட்கள் சதொச, கூட்டுறவுச் சங்கம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஊடாக மக்களுக்கு விற்பனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையான விலை குறித்த நடவடிக்கை எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: