2017 ஆம் ஆண்டு முதல் ஜீ.எம்.பி. சான்றிதழ் அவசியம்!
Sunday, February 19th, 20172017 ஆம் ஆண்டு முதல் உணவு தயாரிப்பு, விநியோக நிறுவனங்கள்,சுகாதாரத்துக்கு பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்திய ஜீ.எம்.பி. சான்றிதழ் பெற்றிருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கைக் கட்டளைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தற்போது வரை அதற்கான விண்ணப்பங்கள் சுமார் 40 கிடைத்துள்ளதாகவும் அதில் 10 நிறுவனங்களுக்கு அந்த சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் டீ.ஜீ.ஜீ. தர்மவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உணவு பாதுகாப்புக்கான எச்.ஏ.சி.சி.பி. சான்றிதழை பெற்றுள்ள நிறுவனங்கள்,ஜீ.எம்.பி. சான்றிதழை பெற்றுக் கொள்வது கட்டாயமில்லை என அவர் கூறியுள்ளார்.
Related posts:
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நம்பி நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் – வலி கிழக்கு மக்கள் ஆதங்கம்!
குடாநாட்டு பெண்களிடம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!
கொழும்பு கறுவா தோட்டம் பகுதியில் உள்ள கட்டடத்தில் பாரிய வெடிப்பு !
|
|