பெண் பொலிஸாரின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!
Thursday, August 25th, 2016
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றும் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளதாகவும் இதன்படி பெண் பொலிஸ் அதிகாரிகளின் சேவை தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்தள்ளார்.
பெண் பொலிஸார் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தள்ளார். இதற்கமைய, இன்று கூடவுள்ள பொலிஸ் ஆணைக்குழு, பெண்களின் உரிமைகள், பதவி உயர்வுகள் மற்றும் சம்பளப் பிரச்சினைகள் குறித்து ஆராயவுள்ளது.
Related posts:
மத்தள வானூர்தி நிலையத்தை கையேற்க இந்திய நிறுவனமொன்று ஆர்வம்!
மன்னார் கடலில் மீட்கப்பட்ட யாழ் யுவதியின் சடலம் கொலையா? தற்கொலையா? என பொலிசார் தீவிர விசாரணை!
சில பரிந்துரைகளை, இலங்கை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளது - சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைக்கு மத்திய வ...
|
|