பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் புது டெல்லியில் மாநாடு – இந்தியா செல்கிறார் அமைச்சர் அலி சப்ரி!
Wednesday, March 1st, 2023வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நாளை 02 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.
பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறும் மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார்.
இந்த மாநாட்டை தவிர, மார்ச் 03 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 04 ஆம் திகதி வரை அலி சப்ரி இந்தியாவில் தங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முதல் காலாண்டில் மின்சார சபைக்கு 5781 மில்லியன் ரூபா நட்டம்!
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் ஹர்த்தால்!
உலர் பழவகை ஏற்றுமதி தொடர்பில் இத்தாலியுடன் ஒப்பந்தம்!
|
|