புலமைப்பரிசில் திட்டங்களை அறிவித்தது இந்தியா!

Thursday, March 15th, 2018

இந்திய கலாசார ஒத்துழைப்பு சபையின் கலை மற்றும் இசை நடனத்துறைகளுக்கு வழங்கப்படும் இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டங்களை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி பெற்றுள்ள 20-25 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த புலமைப்பரிசிலுக்காக விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை கொழும்பில் உள்ள இந்திய கலாசார நிலையம், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகம், கண்டியில் உள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரகம், ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய தூதரக அலுவலகம், என்பவற்றில்பெற்றுக்கொள்ளமுடியும்.

அத்துடன், www.iccr.gov.in என்ற இணையத்தில் இருந்து விண்ணப்பங்களை தரவிறக்கம்செய்து கொள்ள முடியும் என்றும் இ;ந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

Related posts: