புத்தாண்டை முன்னிட்டு இன்றும் 2500 இ.போ.ச பஸ்கள் சேவையில்!

Thursday, April 12th, 2018

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பயணிகளின் நலன்கருதி இன்று (12) இரண்டாயிரத்து 500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை போக்குவரத்துச் சபையும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் இணைந்து கடந்த 10ஆம் திகதி இரண்டாயிரத்து 300 பஸ் சேவைகளைநடத்தியிருந்தன.

இரண்டாயிரத்து 500 பஸ் சேவைகள் நேற்றும்(11) நடத்தப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

மேலும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு மேலதிக பஸ்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்த பஸ் வண்டிகளில் பயணம் செய்யும் எந்தவொரு பயணியும்நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலான கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

கூடுதலான கட்டணம் அறவிடப்பட்டால் 1955 என்ற தொலைபேசி ஊடாக முறையிடலாம் என ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர தெரிவித்தார்.

Related posts: