புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் சேவை!

Friday, April 8th, 2016

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும 25 ஆம் திகதி வரை பயணிகளுக்கான விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு 6000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமசந்திர குறிப்பிட்டார். இதுதவிர அதிவேக வீதிகளிலும் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts: