புத்தாண்டு தினத்தன்று வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு : 758 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, April 15th, 2021

நாட்டில் நேற்றைய தினம் 121 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று இடம்பெற்ற இந்த விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விபத்துக்களால் 74 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்  இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: