புத்தாண்டு காலத்தில் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கும் – இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Tuesday, March 23rd, 2021

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் இறக்குமதி கட்டுப்பாடுகள், வரி மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவையை அடிப்படையாக கொண்டே குறித்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

எண்ணெய் மற்றும் வெண்ணெய்க்கு அதிக வரி விதிக்கப்படுவதால் பேக்கரி தொழில் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அதனால் பேக்கரி தொழிலை நடத்துவதில் உரிமையாளர்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டிய குறித்த சங்கத்தின் தலைவர் மற்றய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன என்று நாம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையைம் இதுவரை  எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

அதனடிப்படையில் பண்டிகை காலத்தின்போது பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கும் எனவும்  அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: