புதிய முறையின் கீழ் நெல் கொள்வனவு!

Tuesday, July 3rd, 2018

விவசாயிகளின் சிறுபோக அறுவடையை புதிய முறையின் கீழ் கொள்வனவு செய்ய தயாராக இருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

இந்த முறை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நெல்லைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: