புகையிரத விபத்து: கடந்த இரண்டு வருடங்களில் 323 பேர் பலி!

Wednesday, August 31st, 2016

கடந்த இரண்டு வருடங்களில் (2014 -2015) புகையிரத விபத்தில் சிக்கி 323 பேர் உயிரிழந்துள்ளதுடன் 800 பேர் காயமடைந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு 148 உயிரிழப்புகளும் 2015ஆம் ஆண்டு 175 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. புகையிரதங்கள் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதாலேயே அதிகளவு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: