புகையிரத சாரதிகள் நள்ளிரவிலிருந்து தொழிற்சங்க நடவடிக்கையில்!

இலங்கையின் புகையிரத சாரதிகள் இன்று (6) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர் என தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட வெளியிட்டுள்ளார்.
தற்போதைய தேசிய அரசாங்கம் தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்த போதிலும், அதனை நடைமுறைப்படுத்தவில்லை என லோகோமோடிவ் பொறியியலாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த நிலையிலேயே தாம் இதனை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
பலாலி விமான நிலையத்தை ஆராய இந்திய குழு பயணம்!
இலங்கையில் சிறு வணிக முயற்சிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா உதவித் திட்டம்!
நிரூபித்து காட்டினால், எந்த நேரத்திலும் பதவி விலக தயார் - சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவ...
|
|