புகையிரத ஊழியர்களும் வேலைநிறுத்த எச்சரிக்கை!

Friday, September 15th, 2017

ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக புகையிரத ஊழியர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை எச்சரித்துள்ளது.

புகையிரத திணைக்கள ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறு வலியுறுத்தும் வகையில் பல்வேறு தடவைகள் அடையாள வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கடைசி நேரத்தில் வேலைநிறுத்தப் போராட்டங்கள் கைவிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த சம்பள முரண்பாடுகளை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாது போனால் அன்றைய தினம் நள்ளிரவு தொடக்கம் வேலை நிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

20ஆம் திகதி தொடக்கம் இரண்டு நாட்கள் வரை இந்த அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள், காவலர்கள், புகையிரத நிலைய அதிபர்கள் உள்ளிட்ட பல தரப்பு ஊழியர்களும் இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts: