புகையிரதம் மீது கல்வீச்சு சம்பவம் தொடர்பில் மூவர் கைது.!

Thursday, August 18th, 2016

 

கள­னி­வெளி புகையிரத பாதையில் அவிசாவளையில் இருந்து புறக்­கோட்­டையை நோக்கி பாடசாலை மாண­வர்­களை ஏற்­றிக்­கொண்டு செல்லும் புகையிரதம் மீது கல்­லெ­றிந்­தார்கள் என்ற சந்­தே­கத்தில் மூன்று பேரை பொலிஸார் கைது­செய்­துள்­ளனர் என செய்திகள் கூறுகின்றன.

இது தொடர்­பாக தெரியவருகையில் –

அவிசா­வளையில் இருந்து புறக்­கோட்­டையை நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்த பாட­சாலை சேவை புகையிரதம் மீது நார­ஹேன்­பிட்­டி­யில் வைத்து இளை­ஞர்கள் 3 பேர் கல்­லெ­றிந்­துள்­ளனர். 16,17 மற்றும் 18 வய­து­டைய இளை­ஞர்­களே இவ்­வாறு கல்­லெ­றிந்­­தாக சந்­தே­கத்­தின்­பேரில் நாரஹேன்­பிட்டி பொலிஸாரால் கைது­செய்­யப்பட்டுள்­ளனர். சந்­தேக நபர்கள் நார­ஹேன்­பிட்டி பிரதே­சத்தைச் சேர்ந்­­வர்­­ளாவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இவர்­களின் கல்­லெறி தாக்­கு­தலில் புகையிரதத்தின் கண்­ணா­டிகள் சேத­­டைந்­துள்­­துடன் விளையாட்­டுத்­­­மா­கவே கல்­லெ­றிந்­­தா­கவும் பொலிஸார் மேற்­கொண்ட ஆரம்ப கட்ட விசாரணை­யின்­போது இவர்கள் தெரி வித்துள்ளனர். சந்தேக நபர்கள் இன்றைய தினம் புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related posts: