புகைக்கசிவு தர நிர்ணய சான்றிதழை வாகனத்தில் வைத்திருப்பது கட்டாயம்!

Sunday, January 6th, 2019

வாகனம் புகைக்கசிவு தரநிர்ணயத்திற்கு அமைவானது என உறுதிப்படுத்தப்பட்டு வழங்கப்படும் சான்றிதழ் எந்நேரமும் வாகனத்தில் வைத்திருக்கப்பட வேண்டும் என முல்லைத்தீவு போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

போக்குவரத்துக் கடமையில் ஈடுபடும் பொலிஸார் கடந்த காலங்களில் வாகன வருமான அனுமதிப்பத்திரம், சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி அட்டை ஆகியவற்றை மட்டும் பரிசோதித்து வந்தனர். தற்பொழுது வாகனப் புகைக்கசிவு தரநிர்ணய சான்றிதழையும் பரிசோதிக்கின்றனர்.

எனவே சாரதிகள் புகைக்கசிவு தரநிர்ணய சான்றிதழை வாகனத்துடன் எடுத்துச் செல்லுமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: