பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு ஆளுநர் செந்தில் – தொண்டமானின் கோரிக்கை ஏற்பு!

Thursday, September 28th, 2023

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தினேஸ் குணவர்தன உறுதியளித்துள்ளார்.

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (26) அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் அனைத்து மாகாணங்களைச் சேர்ந்த ஆளுநர்கள் கலந்து கொண்டு தங்களுடைய மாகாணங்களில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் தினேஸ் குணவர்தனவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

கிழக்கு மாகாணத்தில் பல வருட காலமாக பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்த நியமனங்கள் வழங்கப்படாத நிலையில் கணிசமானவர்கள் பணிபுரிகின்றனர் எனவும், இவர்களை நிரந்தரமாக்குவதற்கான வயதையும் தாண்டிய நிலையில் பலர் உள்ளனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதரிடம் ஆளுநர் வலியுறுத்தினார்.

ஆளுநரின் கோரிக்கையை ஏற்ற பிரதமர், பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை அங்கீகாரம் பெற தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: