பிரதேசத்தின் அபிவிருத்திக்காக நாம் ஒவ்வொருவரும் அயராது உழைப்போம் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Wednesday, May 30th, 2018

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காக நாம் ஒவ்வொருவரும் அயராது உழைக்கவேண்டும். அதனூடாகவே நாம் எமது பிரதேசத்தின் எதிர்கால செயற்பாடுகளை வெற்றிகொள்ளமுடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச தவிசாளரும் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வேலணையிலுள்ள கட்சியின் பிரதேச அலுவலகத்தில் வேலணை பிரதேசத்தின் முதலாம் வட்டார நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு  தெரிவித்துள்ளார்

குறித்த சந்திப்பின்போது வேலணை பிரதேசத்தின் முதலாம் வட்டார பகுதி தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பிலான பல்வேறுபட்ட விடயங்கள் முன்நிறுத்தப்பட்டு அவை தொடர்பில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக குறித்த வட்டாரத்தின் பிரதிநிதிகளுடன்  ஆராயப்பட்டது.

குறித்த வட்டாரத்தின் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்று அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முயற்சிப்போம் என்றார்.

Related posts: