பிரதேச மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை -ஜனாதிபதி தெரிவிப்பு!
Tuesday, June 7th, 2016சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அரச அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொஸ்கம சாலாவ பகுதி யில் அமைந்துள்ள இராணுவ முகாமில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள கருத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
கொஸ்கம சாலாவ பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் ஏற்பட்ட தீவிபத்து காயமடைந்து உயிரிழந்த இராணுவ வீரரின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அரச அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளேன் என்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்
Related posts:
|
|