பாதுகாப்பு குறித்த விடயங்களில் இந்தியாவுக்கே முதலிடம் – இலங்கையின் புதிய வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவிப்பு!

Friday, August 14th, 2020

மூலேபாய பாதுகாப்பு குறித்த விடயங்களில் இந்தியாவுக்கு முதலிடம் என்ற அணுகுமுறை பின்பற்றப்படும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெளிவாக தெரிவித்துள்ளார் என புதிய வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்

டைம்ஸ்ஓவ் இந்தியாவுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில் தேசிய பாதுகாப்பே முதலாவதாக உள்ளது என குறிப்பிட்டுள்ள புதிய வெளிவிவகார செயலாளர் பிராந்திய பாதுகாப்பு இல்லாமல் தேசிய பாதுகாப்பு காணப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் பொருளாதார விவகாரத்தில் இலங்கைக்கு புதிய முதலீடுகளை கொண்டுவரும் எவரையும் நாங்கள் வரவேற்க தயார் எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி கடன்களுக்கு இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் என அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இலங்கை நடுநிலைமையோடு இருக்கவிரும்புகின்றது அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை பேண விரும்புகின்றது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனவும் புதிய வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி தான் துறைமுகங்கள் விமானநிலையங்கள் போன்ற தேசிய மூலோபாய சொத்துக்களின் முழுமையான கட்டுப்பாட்டினை எந்த வெளிநாட்டுக்கும் வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார் எனவும் வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: