பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை சபைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது!

Wednesday, December 8th, 2021

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை சபைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியின் முதலாம் இலக்க அறையில் குற்த்த கூட்டம் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை சபைத் தலைவர் என்ற ரீதியில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றம் சென்ற ஜனாதிபதியை, சபை முதல்வரும் அமைச்சருமான தினேஸ் குணவர்தன மற்றும் ஆளுங்கட்சியின் முதற்கோளாசானும், அமைச்சருமான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தலைமையிலான அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரவேற்றனர்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, தற்போதைய பாதுகாப்புப் பிரிவினரின் அவதானத்துக்கு இலக்காகியுள்ள விடயங்கள் தொடர்பில், அமைச்சர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பிரச்சினைகள் மற்றும் யோசனைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, முப்படைகளின் தளபதிகள் மற்றும் காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட, பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்களின் அதிகாரிகள், இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: