பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற அவர்களது சட்டத்தரணிகளே காரணம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றச்சாட்டு!
Friday, July 19th, 2024
கஞ்சிபானை இம்ரான் மற்றும் கனேமுல்ல சஞ்ஜீவ ஆகிய பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற அவர்களது சட்டத்தரணிகளே காரணம் எனத் தெரியவந்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலக குழு உறுப்பினர்களின் செயற்பாடுகளைத் தடுப்பதற்காகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சுங்க திணைக்கள அதிகாரிகளின் போராட்டம் கைவிடப்பட்டது!
மகிந்த தரப்புடன் பேச்சுக்கு இடமில்லையாம் மைத்திரி!
கடலில் மீட்கப்பட்ட ரோஹிங்கிய அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்!
|
|
|


