ஐந்து  கோரிக்கைகளை முன்வைத்துத் தபால் ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் யாழிலும் முன்னெடுப்பு!

Tuesday, December 20th, 2016

ஒன்றிணைந்த தபால் தொழிற் சங்கங்களின் முன்னணி தபால் ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு, ஊழியர் நியமனத்தில் தேவையற்ற தலையீடுகளைத் தவிர்த்தல் உள்ளிட்ட ஐந்து  கோரிக்கைகளை முன்வைத்து நேற்றுத் திங்கட்கிழமை(19) நள்ளிரவு அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு-12 மணிக்கு ஆரம்பித்த இந்த வேலை நிறுத்தம் நாளை புதன்கிழமை நள்ளிரவு-12 மணி வரை தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது.

குறித்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக யாழ்.குடாநாட்டிலும்  தபால் சேவை ஊழியர்களும் இன்றைய தினம் கடமைக்குச் செல்வதைத் தவிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக யாழ்.குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தபால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பிரதம தபாலகமும் இன்று காலை மூடப்பட்டுள்ளமையால் யாழ்.குடாநாட்டிற்கான அனைத்துத் தபால் சேவைகளும் முற்றாக முடங்கியுள்ளது.

unnamed (2)

unnamed (1)

Related posts: