சுங்க திணைக்கள அதிகாரிகளின் போராட்டம் கைவிடப்பட்டது!
Friday, September 23rd, 2016
சுங்க கட்டளைச் சட்டத்தை நீக்கி கடத்தல்காரர்களுக்கு நன்மை ஏற்படக்கூடிய விதமான புதிய சுங்க சட்டமூலம் உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்க ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட மேலதிக வேலை தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட்டதனால் இந்த போராட்டத்தை கைவிடுவதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுதத் சில்வா கூறினார்.

Related posts:
இன்றும் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
சட்டமுரணாக அமைக்கப்பட்டவை அல்ல யாழ் நகர பழக்கடைகள் - றெமீடியஸ் தெரிவிப்பு!
வெளிநாடுகளில் பரிதவித்த மேலும் ஒருதொகுதி இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!
|
|
|


