பாணின் விலையை குறைக்கத் தவறினால், பாணுக்கு கட்டுப்பாட்டு விலை – வர்த்தக விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரிக்கை!

Tuesday, July 23rd, 2024

பேக்கரி உரிமையாளர்கள் பாணின் விலையை குறைக்கத் தவறினால், பாணுக்கு கட்டுப்பாட்டு விலை அறிமுகம் செய்யப்படும் என  வர்த்தக விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எதிர்வரும் இரண்டு நாட்களில் பேக்கரி உரிமையாளர்கள் பாணின் விலையை குறைக்காவிட்டால் கட்டுப்பாட்டு விலை அறிமுகம் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

பேக்கரி உற்பத்தியாளர்களை சந்தித்து பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரண்டு அல்லது மூன்று நாட்களில் விலை குறைப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படாவிட்டால் அரசாங்கம் தீர்வு ஒன்றை எடுக்க நேரிடும் என பேக்கரி உற்பத்தியாளர்களிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சண்ட்விட்ஜ் மற்றும் சாதாரண பாண் ஆகியனவற்றின் விலையை குறைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

450 கிராம் எடையுடைய பாணின் விலை மக்களினால் உணரக் கூடிய வகையில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

வறிய மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஈழ மக்கள் ஜனநா கட்சியின் பிரான்ஸ் கிளை உதவிக்கரம்
தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தை முழுமையாக வழங்க நடவடிக்கை - மாக...
ஊர்காவற்துறை பாடசாலை மின் துண்டிப்பு விவகாரம் - வடக்கின் பிரதம செயலாளர் தலையீடு - மீண்டும் வழங்கப்ப...

அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையா...
கிளிநொச்சியில் புரவிப் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்...
மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தும் முயற்சி இருப்பதாக மின்சார பயனர் சங்கம் குற்றச்சாட்டு!