பாடவிதானங்களில் சிறுவர் பாதுகாப்பை உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை!

Friday, July 1st, 2016

நாட்டின் பாடசாலை பாடவிதானங்களில் சிறுவர் பாதுகாப்பு விடயத்தையும் உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் முதல் தரம் இரண்டிலிருந்து தரம் 8 வரை சிறுவர் பாதுகாப்பு விடயத்தை பாடவிதானத்துடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் கலாநிதி நடாஷா பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான கலந்துரையாடல்களை கல்வி அமைச்சு அதிகாரிகளுடன் நடத்திவருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

Related posts: