பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோக வழக்கில் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!
Monday, July 4th, 2016கடந்த மாதம் யாழ் நகரிற்கு அண்மையிலுள்ள பாடசாலையொன்றில் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்ட்ட சந்தேக நபர்களுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவினை யாழ் நீதிமன்ற நீதிபதி எஸ் சசிதரன் பிறப்பித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியர், குற்றத்தினை மறைக்க முயன்ற அதிபர் மற்றும் ஏனைய இரண்டு ஆசிரியர்களும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் கடந்த மாதம் குறித்த பாடசாலையின் மாணவர்கள், பாடசாலை அதிபர் மற்றும் அசிரியர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இணைய வலையமைப்பில் தடங்கல்: குடாநாட்டில் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு!
எரிபொருள் விலையை குறைக்குமாறு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் நிதியமைச்சர் பசில் ரா...
70 மில்லியன் ரூபாய் முறைக்கேடு - நாமல் ராஜபக்சவை செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு...
|
|